2020-மார்ச்சு:
ரெட்டியார்கள் பற்றி ஒரு வாரப் பத்திரிகையில் வந்த கட்டுரை!!
உழவுத்தொழில் செய்து வாழ்ந்த தென்னகத்தின்குடி ஒன்று, உழவு பொய்த்தபோது ஏக்கப் பெருமூச்சில் பொசுங்கிப்போகாமல், அதுவரை அரிச்சுவடியே அறியாத உணவுத்தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது!ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மலைப்பகுதியில் விவசாயத்தில் வாழ்ந்த ஒரு பிரிவு ரெட்டியார்கள் 1750ம் ஆண்டுவாக்கில் தமிழகத்தின் தென்கோடிக்கு வந்தனர். நெல்லையை அடுத்துள்ள மூலக்கரைப்பட்டியில் கோட்டை கட்டி கூட்டுக் குடும்பமாகக் குடியேறினர். பூர்வாசிரம ஊர்ப்பெயரை தாங்கி கெண்டாபுரத்தார், ஈங்குலார், இருவரத்தார், நெல்லியார் என 22 பெயர்களில் அழைக்கப்பட்டனர்இவர்கள். சில நூறுபேராக இங்கு வந்தவர்கள் பல்கிப்பெருகி பக்கத்து ஊர்களிலும் பரந்தனர். இப்போது 36 ஊர்களில் மட்டுமே வசிக்கும் இவர்கள்தான் தமிழகத்துக்கே சோறு போடும் ஓட்டல் தொழிலில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளனர்!‘‘நாயக்கர் ஆட்சியில் இங்கு வந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பது, நூறு ஏக்கருக்குக் குறைவில்லை. திடீரென விவசாயம் வீழ்ந்தது. கொழும்பு சென்ற எங்கள் முன்னோர் சோடா வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயருடன் பங்குதாரர்களாக சேர்ந்து நடத்திய விம்டோ சோடாவுக்கு உலக யுத்தத்தின்போதுராணுவ கான்ட்ராக்ட் கிடைத்தது.இலங்கை மக்கள் சோடாவை மதுவோடு கலந்து குடித்து பழக்க ப்பட்டவர்கள். அதனால் வியாபாரம் சூடு ஆறவில்லை. மதுப்பிரியர்களின் மனங்கவர சைடு டிஷ் தயாரித்துக் கொடுத்தால் இன்னமும் சம்பாதிக்கலாம் என நினைத்தவர்கள், மாமன், மச்சான்களை இங்கிருந்து கூட்டிப்போய் சமைக்கச் செய்தனர். இப்படித்தான் கண்டி இடியாப்பம், யாழ்ப்பாண சொதி எல்லாம் எங்களுக்குக் கைவந்த கலையானது. ஸ்ரீமாவோ&சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி சொந்த ஊருக்கு துரத்தப்பட்டபோது சமையல்தான் கை கொடுத்தது’’ என்றார் மூலக்கரைப்பட்டிரகுபதி ரெட்டியார்.இலங்கையிலிருந்து திரும்பிய ரெட்டியார்கள் முதல் வேலையாக கண்கவரும் ஓட்டல்களைக் கட்டினர். இலங்கையில் சைடு டிஷ்ஷில் தொடங்கிய சமையல் சகாப்தத்தை தமிழகத்தில் புல் மீல்ஸுடன் தொடர்ந்தனர். சப்பாத்தியை சப்புக்கொட்டிக்கொண்டிருந்த தமிழர் நாவுகள், சிலோன் பரோட்டாவின் ருசி கண்டன. தேங்காய்ப்பாலின் மணம் கமழ்ந்த சொதிசொக்க வைத்தது. உப்பு, உறைப்பு குறைந்த வழக்கமான சமையலைவிட காரசார ஆந்திர பாணி சமையல் நம்மவர்களைக் கட்டிப்போட்டது.அதிவிரைவிலேயே தமிழகம் முழுவதும் 36 ஊர் ரெட்டியார்களும்கிளை விரித்தனர். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலத்தவரும் ரெட்டியார் சாப்பாட்டுக்கு அடிமை ஆயினர். இலங்கையின் வாணி விலாசும், துபையின் அபிராமி ஓட்டலும் ரெட்டியார் பெருமையை இன்றளவும் பறைசாற்றுகின்றன.இவர்கள் உணவகத்தொழிலை பிறவித்தொழில் போல் பற்றிக்கொண்டதற்கு வேறொரு காரணமும் சொல்கின்றனர். நிலம் நீச்சுடன் ஆடம்பரமாக வாழ்ந்தபோது இவர்களைச் சுற்றி வேலையாட்கள்நிறைய. வீட்டில் 3 சமையற்கட்டுகள் இருக்கும். நெல் அவிக்க ஒரு அடுப்பு, வீட்டுக்காரர்களுக்கு ஒரு அடுப்பு, வேலைக்காரர்களுக்கு ஒரு அடுப்பு என 3 அடுப்புகளும் அணையாமல் எரியும். ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு ஆள் அமர்த்தியிருந்தனர். அவர்களிடமிருந்து கற்ற வித்தையில் ஆந்திர நுட்பத்தைச் சேர்த்து கலவையான புதிய சமையல் முறையை படைத்ததாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.‘‘நாங்கள் சமையலறையில் கரண்டி பிடிக்கும் சாதாரணர் அல்ல... போர்முனையில் வாள் பிடிக்கும் சமரர்கள். பலர் நினைப்பது போல கிருஷ்ண தேவராயர் பின்னால் வந்தவர்கள் அல்லர். அப்போது வந்த ரெட்டியார்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களில்வசிக்கிறார்கள்.கார்காலத்தில் கோதாவரி, கிருஷ்ணா மலைப்பகுதியில் ஏர் பிடித்தவர்கள், போர்க்காலத்தில்மசூலிப்பட்டினத்தில் கூடாரம் அடித்த டச்சுபடைப்பிரிவில் சேர்ந்தோம். டச்சுக்காரர்கள்பின்னால் மருதநாயகத்தை எதிர்க்க கடல் வழியாக வந்தோம். அவரிடம் தோற்ற டச்சுக்காரர்கள்எங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.நாங்கள் தூத்துக்குடி கடற்கரையோரமாக இந்தப் பகுதிக்கு வந்தோம்’’ என்று வரலாறு கூறுகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெள்உவன்.இவர்கள் வாழ்ந்த கதையை விட தொழிலில் வளர்ந்த கதை இவர்கள் கைப்பக்குவத்தைப் போலவே சுவையானது. அனைவருமே ஓட்டல் தொழிலில் இருந்தாலும் பெண்களை ஈடுபடுத்துவதில்லை. காய்கறி கொள்முதல், சமையல், பரிமாற்றம் என அனைத்து வேலைகளையும் அந்தஸ்து பாராமல் சொந்த பந்தமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறது.ரெட்டியார் ஓட்டலில் வற்றல் குழம்பும் அவியலும் பிரசித்தம். காஸ்ட்லி கல்யாணத்தில் நாம் வடை, பாயசம் போடுவோம். அவர்கள் சுடச்சுட அல்வா கொடுக்கிறார்கள். காய்கறியுடன் பருப்புக்கு பதிலாக பச்சரிசிசேர்த்து செய்யும் கம்ம கூர (கூட்டு), மிளகாய் பொடி விரவிய மசாலுடன் புளியைக் கலந்து காய்கறி வெட்டிப்போட்டு இறக்கும் மிரப்படி புலுசு, பச்சரிசி வெல்லம் சேர்த்த அக்காரை போன்றவை இவர்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள்.ஸ்வீட் ஸ்டால், பேக்கரி தொழிலிலும் விறுவிறுவென முன்னேறி, சைவ சமையல் சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாக அரசோச்சிய இவர்களுக்கு சமீபகாலமாக அதிரடியான அதிர்ச்சி. போட்டிகள் பெருகிவிட்டதால், தமிழக ஓட்டல் தொழிலில் இவர்களின் பங்களிப்பு குறைந்துவருகிறது. கண்முன்பே தாங்கள் சேர்த்த பெருமை குலையும் கவலையில் 36 ஊர் ரெட்டியார்களின்பெருந்தலைகள் உள்ளனர்,
No comments:
Post a Comment