Monday, 11 October 2021

காந்தி கணக்கு Gandhi Account

காந்தி கணக்கு என்றால் என்ன?
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும்.
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை..!

அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை  தடுத்துள்ளார்..

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! 

இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள்,  5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.. "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

*ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்..* *"காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்!* (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது.. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!   

Translated from Tamil to English by Google translator

What is the Gandhi Account?
 Get to know strangers.
 The only leader in the world to be sentenced to 40 years in prison is W. U. Chidambaram Pillai ..!

 Coimbatore jail is one of them, which has made a huge impact in Vausi ..!

 The jailer's name is Mingel ... very bad .. cruel ..!

 While being taken to jail, they were tied up and dragged all over the street ..!

 Vausi has a separate room inside the jail .. but there is no air facility in it .. there is no cleanliness and hygiene .. Vausi was locked only after the animal was locked in the legs ..!

 They shaved his head as soon as he went to jail .. They gave him only one truss .. Even that was sewn with a sack.

 For those who put food for a thousand people a day, they gave pulp in jail .. It was also fermented .. Sometimes worms float in that pulp ..!

 Due to ill health, the queen asked for rice only for one day.

 The hemp tearing machine had to be rotated by hand .. This was the first job given to Vausi ... In doing so, the skin on Vausi's hands was torn and bleeding .. Seeing that, a prisoner ran away without asking and stopped the machine ..

 But Minjel smashed the prisoner ... Then, without giving him the work to be done by hand, they gave him the job of pulling the check .. That is, they locked Vausi in response to the cow .. That too in the heat of the day .. If they fall down in a trance, they will beat him with a whip ..!

 One of the prisoners, who knew the value of Vusi, folded both his hands over his head and said, "Hello, sir." That was all.

 When Vausi was released, his lawyer's license was confiscated to the extent that he could not continue his work as a lawyer. He worked in a rice shop. After working all day, he could go home with 4 bags of rice.

 He has been selling kerosene on his head because he is in a difficult condition even for half a stomach porridge ...!

 Worse than this, senior advocate Rajaji refused when asked by Vausi to help the plaintiff in court to revoke his lawyer license.

 Sometimes Vausi opposes not leaving Gandhi and sometimes not accepting Gandhi's policies ..!

 After hearing that the Vausi family was in poverty, Tamils ​​in South Africa raised Rs 5,000 and gave it to Gandhi.

 * But the money was never given to Gandhi and Vausi .. * * Are we saying "Gandhi's account" .. This is it! *

 There is no martyr or militant leader in Indian politics equal to Vausi.  However, it is unfortunate that he did not get the respect he deserved in his own party, even after his death. It is a bitter truth that the Congress did not even help him to face some cases ..!

 In fact, Vausi was more affected by the treachery of his own party than by the oppression and degeneration of the British government ..!

 Tamils ​​in India are proud to have sailed against the whites who had enslaved them for many years ..!

           

Saturday, 7 March 2020

கொண்ட ரெட்டி

2020-மார்ச்சு:
ரெட்டியார்கள் பற்றி ஒரு வாரப் பத்திரிகையில் வந்த கட்டுரை!!    
 
உழவுத்தொழில் செய்து வாழ்ந்த தென்னகத்தின்குடி ஒன்று, உழவு பொய்த்தபோது ஏக்கப் பெருமூச்சில் பொசுங்கிப்போகாமல், அதுவரை அரிச்சுவடியே அறியாத உணவுத்தொழிலில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது!ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மலைப்பகுதியில் விவசாயத்தில் வாழ்ந்த ஒரு பிரிவு ரெட்டியார்கள் 1750ம் ஆண்டுவாக்கில் தமிழகத்தின் தென்கோடிக்கு வந்தனர். நெல்லையை அடுத்துள்ள மூலக்கரைப்பட்டியில் கோட்டை கட்டி கூட்டுக் குடும்பமாகக் குடியேறினர். பூர்வாசிரம ஊர்ப்பெயரை தாங்கி கெண்டாபுரத்தார், ஈங்குலார், இருவரத்தார், நெல்லியார் என 22 பெயர்களில் அழைக்கப்பட்டனர்இவர்கள். சில நூறுபேராக இங்கு வந்தவர்கள் பல்கிப்பெருகி பக்கத்து ஊர்களிலும் பரந்தனர். இப்போது 36 ஊர்களில் மட்டுமே வசிக்கும் இவர்கள்தான் தமிழகத்துக்கே சோறு போடும் ஓட்டல் தொழிலில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளனர்!‘‘நாயக்கர் ஆட்சியில் இங்கு வந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பது, நூறு ஏக்கருக்குக் குறைவில்லை. திடீரென விவசாயம் வீழ்ந்தது. கொழும்பு சென்ற எங்கள் முன்னோர் சோடா வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயருடன் பங்குதாரர்களாக சேர்ந்து நடத்திய விம்டோ சோடாவுக்கு உலக யுத்தத்தின்போதுராணுவ கான்ட்ராக்ட் கிடைத்தது.இலங்கை மக்கள் சோடாவை மதுவோடு கலந்து குடித்து பழக்க ப்பட்டவர்கள். அதனால் வியாபாரம் சூடு ஆறவில்லை. மதுப்பிரியர்களின் மனங்கவர சைடு டிஷ் தயாரித்துக் கொடுத்தால் இன்னமும் சம்பாதிக்கலாம் என நினைத்தவர்கள், மாமன், மச்சான்களை இங்கிருந்து கூட்டிப்போய் சமைக்கச் செய்தனர். இப்படித்தான் கண்டி இடியாப்பம், யாழ்ப்பாண சொதி எல்லாம் எங்களுக்குக் கைவந்த கலையானது. ஸ்ரீமாவோ&சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி சொந்த ஊருக்கு துரத்தப்பட்டபோது சமையல்தான் கை கொடுத்தது’’ என்றார் மூலக்கரைப்பட்டிரகுபதி ரெட்டியார்.இலங்கையிலிருந்து திரும்பிய ரெட்டியார்கள் முதல் வேலையாக கண்கவரும் ஓட்டல்களைக் கட்டினர். இலங்கையில் சைடு டிஷ்ஷில் தொடங்கிய சமையல் சகாப்தத்தை தமிழகத்தில் புல் மீல்ஸுடன் தொடர்ந்தனர். சப்பாத்தியை சப்புக்கொட்டிக்கொண்டிருந்த தமிழர் நாவுகள், சிலோன் பரோட்டாவின் ருசி கண்டன. தேங்காய்ப்பாலின் மணம் கமழ்ந்த சொதிசொக்க வைத்தது. உப்பு, உறைப்பு குறைந்த வழக்கமான சமையலைவிட காரசார ஆந்திர பாணி சமையல் நம்மவர்களைக் கட்டிப்போட்டது.அதிவிரைவிலேயே தமிழகம் முழுவதும் 36 ஊர் ரெட்டியார்களும்கிளை விரித்தனர். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலத்தவரும் ரெட்டியார் சாப்பாட்டுக்கு அடிமை ஆயினர். இலங்கையின் வாணி விலாசும், துபையின் அபிராமி ஓட்டலும் ரெட்டியார் பெருமையை இன்றளவும் பறைசாற்றுகின்றன.இவர்கள் உணவகத்தொழிலை பிறவித்தொழில் போல் பற்றிக்கொண்டதற்கு வேறொரு காரணமும் சொல்கின்றனர். நிலம் நீச்சுடன் ஆடம்பரமாக வாழ்ந்தபோது இவர்களைச் சுற்றி வேலையாட்கள்நிறைய. வீட்டில் 3 சமையற்கட்டுகள் இருக்கும். நெல் அவிக்க ஒரு அடுப்பு, வீட்டுக்காரர்களுக்கு ஒரு அடுப்பு, வேலைக்காரர்களுக்கு ஒரு அடுப்பு என 3 அடுப்புகளும் அணையாமல் எரியும். ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு ஆள் அமர்த்தியிருந்தனர். அவர்களிடமிருந்து கற்ற வித்தையில் ஆந்திர நுட்பத்தைச் சேர்த்து கலவையான புதிய சமையல் முறையை படைத்ததாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.‘‘நாங்கள் சமையலறையில் கரண்டி பிடிக்கும் சாதாரணர் அல்ல... போர்முனையில் வாள் பிடிக்கும் சமரர்கள். பலர் நினைப்பது போல கிருஷ்ண தேவராயர் பின்னால் வந்தவர்கள் அல்லர். அப்போது வந்த ரெட்டியார்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களில்வசிக்கிறார்கள்.கார்காலத்தில் கோதாவரி, கிருஷ்ணா மலைப்பகுதியில் ஏர் பிடித்தவர்கள், போர்க்காலத்தில்மசூலிப்பட்டினத்தில் கூடாரம் அடித்த டச்சுபடைப்பிரிவில் சேர்ந்தோம். டச்சுக்காரர்கள்பின்னால் மருதநாயகத்தை எதிர்க்க கடல் வழியாக வந்தோம். அவரிடம் தோற்ற டச்சுக்காரர்கள்எங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.நாங்கள் தூத்துக்குடி கடற்கரையோரமாக இந்தப் பகுதிக்கு வந்தோம்’’ என்று வரலாறு கூறுகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெள்உவன்.இவர்கள் வாழ்ந்த கதையை விட தொழிலில் வளர்ந்த கதை இவர்கள் கைப்பக்குவத்தைப் போலவே சுவையானது. அனைவருமே ஓட்டல் தொழிலில் இருந்தாலும் பெண்களை ஈடுபடுத்துவதில்லை. காய்கறி கொள்முதல், சமையல், பரிமாற்றம் என அனைத்து வேலைகளையும் அந்தஸ்து பாராமல் சொந்த பந்தமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறது.ரெட்டியார் ஓட்டலில் வற்றல் குழம்பும் அவியலும் பிரசித்தம். காஸ்ட்லி கல்யாணத்தில் நாம் வடை, பாயசம் போடுவோம். அவர்கள் சுடச்சுட அல்வா கொடுக்கிறார்கள். காய்கறியுடன் பருப்புக்கு பதிலாக பச்சரிசிசேர்த்து செய்யும் கம்ம கூர (கூட்டு), மிளகாய் பொடி விரவிய மசாலுடன் புளியைக் கலந்து காய்கறி வெட்டிப்போட்டு இறக்கும் மிரப்படி புலுசு, பச்சரிசி வெல்லம் சேர்த்த அக்காரை போன்றவை இவர்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள்.ஸ்வீட் ஸ்டால், பேக்கரி தொழிலிலும் விறுவிறுவென முன்னேறி, சைவ சமையல் சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளாக அரசோச்சிய இவர்களுக்கு சமீபகாலமாக அதிரடியான அதிர்ச்சி. போட்டிகள் பெருகிவிட்டதால், தமிழக ஓட்டல் தொழிலில் இவர்களின் பங்களிப்பு குறைந்துவருகிறது. கண்முன்பே தாங்கள் சேர்த்த பெருமை குலையும் கவலையில் 36 ஊர் ரெட்டியார்களின்பெருந்தலைகள் உள்ளனர்,

Wednesday, 5 February 2020

Brahmins

*POOR BRAHMINS*

It is amazing to see that how fiction can become truth in course of time!

Let's examine truth based on facts and real history. 

1. To start with, there is no SINGLE Brahmin God in Hinduism!

2. All Gods are from backward castes, dalits and tribals.

3. Brahmins never created the concept of Gods in Hinduism. 

4. There was not even a SINGLE Brahmin King that ruled India.

5. To be able to oppress others requires positions of power. Brahmins were teachers, scholars, priests, advisors but not rulers.

6. The Brahmin’s traditional occupation was that of temple priest (purohit), officiating religious functions. Their sole income was Biksha (alms) given by the land-lords (non-Brahmins).

7. And another section of Brahmins were teachers, that too without salary.

8. Vedic literature was mostly written by non-Brahmins! The most powerful of the dharma shaastra, that gives Brahmins a high status, is the Manusmriti written by Manu, a non-Brahmin.
Brahmin means a profession (Varna) - not a caste.

9. If the reading and writing of Sanskrit was confined to Brahmins then how do you have the tribal Valmiki composing Ramayana? Ved Vyas, who classified four vedas and wrote Mahabharata, was born to a fisher-woman.

10. Sanskrit was used mostly by non-Brahmin writers - there are very few scriptures in Sanskrit authored by Brahmins.

11. We consider the teachings of Ved Vyas, Vashishtha, Valmiki, Krishna, Rama, Agasthya, Vishwamitra, Shrunga, Gowthama, Buddha, Mahavira, Tulsidas, Thiruvalluvar, Kabir, Vivekananda, Gandhi, Narayana guru etc as most valuable.

12. If none of them were Brahmins why cry out loudly that "Brahmins did not allow you to learn?" There are numerous works on bhakti by non-Brahmin bhakti saints.

13. Brahmins never prevented others from learning.

14. Brahmins were neither rich nor powerful at any point of time in history. Pick up any old Indian story book, you will see ‘Garib Brahmin’ (Poor Brahmin) quoted as a virtue. (Remember Kuchela-Krishna story?)

15. Though their profession was considered as highest stature of the society, the Brahmin ascetics' only way of survival was alms given by people.

16. The biggest contribution of Brahmins is sustaining the best language ever spoken in the earth - Sanskrit. If you learn English or Arab, you have commercial benefits.

17. Nobody ever promoted Sanskrit.
Without any benefits, Brahmins took up voluntary task of learning Sanskrit. Then, now you accuse them of monopoly in Sanskrit!

Besides, Brahmins were never , they were not Kings.. They didn't enjoy powers and wealth.. Naturally, they worked hard on gaining knowledge, led life of austerity.. So there is no question of exploitation by Brahmins.. 
When population of Brahmins range from just 2% in Tamilnadu to 12 %in Uttarakhand how can they dominate majority.. 

After reading all this can anyone blame Brahmins for anything !!

Saturday, 1 February 2020

கள்

மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்,,, 
#ஒரு மரத்துக் #பனங்கள் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
#பனை மரத்துக் #கள் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
#கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

#கள் குடித்துக் #கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் #செத்தாரைப்
பார்த்த துண்டா?

#எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் #கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
#பனையின் கள்ளால் !

அதிகாலைக் #கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் #கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

#தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
#கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு #வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
#கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !

வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
#கள்ளை அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !

#சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய கள் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !

விருந்தாகி #மருந்தாகி
விடிகாலை உணவாகி
#விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !

அளவான #போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!

அளவான #போதை
அளிக்கின்ற #கள்ளை
ஏனருந்தக் கூடாது!
ஏனிறக்கக் கூடாது!

Friday, 31 January 2020

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி
"முதல்வர்களின்
 °°°°°°°°°°°°°°°°°°°°
முதல்வர்"
°°°°°°°°°°°°
"உத்தமர் ஓமந்தூர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராமசாமி ரெட்டியார்"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அவர்களின்
 °°°°°°°°°°°°°°°
125வது பிறந்தநாள் "  2020-02-01
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔹எளிமையின் கம்பீரம்.
🔹எதையும்
     வெளிப்படையாகப்
     பேசும்
     துணிச்சல்காரர்.
🔹சிறந்த எழுத்தாளர்.
🔹ராஜதந்திரி.
🔹சமூக சேவகர்.
🔹நேர்மையும்,
     துணிச்சலும் மிக்க,
     கறைபடாத
     அரசியல்வாதி.
🔹ஊழலுக்கு
     எதிரானவர்.
🔹விவசாயிகளின்
      துணைவன்.
🔹உண்மையான
     அரசியலுக்கு
     உதாரணபுருஷன்.
🔹நடத்தையில் எளிமை.
🔹தேசியமும்,
     தெய்வீகமும் இவரது
     வழி.
🔹ஆதிதிராவிட நலத்
     துறையின் தந்தை.
📌
ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத்துறை இருந்தது.
ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப்பெயர் மாற்றம் செய்து, தனித்துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார்.
📌
கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் இயற்றி
தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றுத்தந்தவர்.
📌
ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் பிரவேசிக்க வைத்த பெருமைக் குரியவர்.
📌
சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  திரு.குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.
📌
அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர்.
📌
ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.
📌
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர்.
📌
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தவர்.
📌
பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.
📌
தேவதாசி முறையை ஒழித்தவர்.
📌
தனது கட்சிக்காரர்களுக்கோ, தனது  குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகைகளோ, முன்னுரிமையோ,  வேலைவாய்ப்புகளோ வழங்காத
உத்தமர்.
📌
பதவி விலகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, ஓமந்தூர் சென்றுவிட்டார்.
📌
பதவி பறிபோகும் கடைசித் தருணங்களில் அரங்கேறும் ரகசியக் கையெழுத்து நாடகங்கள் எதுவும் இல்லாத எளிய நிகழ்வாக அமைந்தது அது.
📌
பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்ட முதல் முதலமைச்சர்.
📌
மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார்.
📌
விவசாயிகளின் முதல்வர்.
📌
கிணறு வெட்ட மானியம்.
📌
ஊற்று நீர்ப்பாசனம்.
📌
நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம்.
📌
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைத்தது,நெல்,கரும்பு விலையை உயர்த்தியவர்.
📌
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தவர்.
📌
சாலை ஓரங்களில் புளியமரம், இலுப்பை மரம், அரசமரம், ஆலமரம் போன்ற மரங்களை நடச் செய்தவர்.
📌
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றிய பெருமைக்குரியவர். 
📌
கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவியேற்று  கிராமத்தார்களும் பெரிய பதவிகளை
அடையமுடியும் என  கிராமங்களுக்கு  பெருமை சேர்த்தவர்.
📌
ஓமந்தூராரின்  அவர்களின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது.
வாழ்க ஓமந்தூரார் புகழ்!
📌
முதல்வர்களின் முதல்வரே!
தங்கள் பிறந்தநாளில் வணங்கி வேண்டுகிறோம்...
தாங்கள் மீண்டும் பிறந்து வாருங்கள்....
அரசியலை தூய்மை படுத்தி மக்களை காப்பாற்றுங்கள்!!
📌
தங்களை போற்றி வணங்கும்,
வி.ஆர்.சிவராமன்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்,
முன்னாள் மாவட்ட தலைவர்,
காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.