Friday, 31 January 2020

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி
"முதல்வர்களின்
 °°°°°°°°°°°°°°°°°°°°
முதல்வர்"
°°°°°°°°°°°°
"உத்தமர் ஓமந்தூர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராமசாமி ரெட்டியார்"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அவர்களின்
 °°°°°°°°°°°°°°°
125வது பிறந்தநாள் "  2020-02-01
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔹எளிமையின் கம்பீரம்.
🔹எதையும்
     வெளிப்படையாகப்
     பேசும்
     துணிச்சல்காரர்.
🔹சிறந்த எழுத்தாளர்.
🔹ராஜதந்திரி.
🔹சமூக சேவகர்.
🔹நேர்மையும்,
     துணிச்சலும் மிக்க,
     கறைபடாத
     அரசியல்வாதி.
🔹ஊழலுக்கு
     எதிரானவர்.
🔹விவசாயிகளின்
      துணைவன்.
🔹உண்மையான
     அரசியலுக்கு
     உதாரணபுருஷன்.
🔹நடத்தையில் எளிமை.
🔹தேசியமும்,
     தெய்வீகமும் இவரது
     வழி.
🔹ஆதிதிராவிட நலத்
     துறையின் தந்தை.
📌
ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத்துறை இருந்தது.
ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப்பெயர் மாற்றம் செய்து, தனித்துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார்.
📌
கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் இயற்றி
தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றுத்தந்தவர்.
📌
ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் பிரவேசிக்க வைத்த பெருமைக் குரியவர்.
📌
சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  திரு.குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.
📌
அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர்.
📌
ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.
📌
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர்.
📌
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தவர்.
📌
பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர்.
📌
தேவதாசி முறையை ஒழித்தவர்.
📌
தனது கட்சிக்காரர்களுக்கோ, தனது  குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகைகளோ, முன்னுரிமையோ,  வேலைவாய்ப்புகளோ வழங்காத
உத்தமர்.
📌
பதவி விலகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, ஓமந்தூர் சென்றுவிட்டார்.
📌
பதவி பறிபோகும் கடைசித் தருணங்களில் அரங்கேறும் ரகசியக் கையெழுத்து நாடகங்கள் எதுவும் இல்லாத எளிய நிகழ்வாக அமைந்தது அது.
📌
பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்ட முதல் முதலமைச்சர்.
📌
மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார்.
📌
விவசாயிகளின் முதல்வர்.
📌
கிணறு வெட்ட மானியம்.
📌
ஊற்று நீர்ப்பாசனம்.
📌
நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம்.
📌
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைத்தது,நெல்,கரும்பு விலையை உயர்த்தியவர்.
📌
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தவர்.
📌
சாலை ஓரங்களில் புளியமரம், இலுப்பை மரம், அரசமரம், ஆலமரம் போன்ற மரங்களை நடச் செய்தவர்.
📌
இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றிய பெருமைக்குரியவர். 
📌
கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவியேற்று  கிராமத்தார்களும் பெரிய பதவிகளை
அடையமுடியும் என  கிராமங்களுக்கு  பெருமை சேர்த்தவர்.
📌
ஓமந்தூராரின்  அவர்களின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது.
வாழ்க ஓமந்தூரார் புகழ்!
📌
முதல்வர்களின் முதல்வரே!
தங்கள் பிறந்தநாளில் வணங்கி வேண்டுகிறோம்...
தாங்கள் மீண்டும் பிறந்து வாருங்கள்....
அரசியலை தூய்மை படுத்தி மக்களை காப்பாற்றுங்கள்!!
📌
தங்களை போற்றி வணங்கும்,
வி.ஆர்.சிவராமன்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்,
முன்னாள் மாவட்ட தலைவர்,
காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.